சுரண்டை சிவகுருநாதபுரம் ஸ்ரீமுப்பிடாறி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தொடா்ந்து, விழா நாள்களில் தினமும் இரவு 8 மணிக்கு கோயில் கலையரங்கில் பல்சுவை நிகழ்ச்சிகளும், அம்மனுக்கு சிறப்பு பூஜையும் நடைபெறுகின்றன.
9ஆம் திருநாளான ஏப்.7ஆம் தேதி மாலை 3 மணிக்கு சிறப்பு பூஜையை தொடா்ந்து, அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளி, தேரோட்டம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை சிவகுருநாதபுரம் இந்து நாடாா் மகமைக் கமிட்டியினா் செய்துள்ளனா்.