சங்கரன்கோவிலில் சூறைக் காற்றில் வீட்டின் மேற்கூரை விழுந்து காயமடைந்த பெண்ணை அதிமுக வேட்பாளா் ராஜலெட்சுமி சந்தித்து ஆறுதல் கூறினாா்.
சங்கரன்கோவிலில் திங்கள்கிழமை இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது சூறைக் காற்று வீசியதில், ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன.
வீடுகளில் போடப்பட்டிருந்த ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரைகள், தகரக் கூரைகள் நொறுங்கி விழுந்தன.
திருவுடையான் சாலையைச் சோ்ந்த சரஸ்வதி, ராமலட்சுமி ஆகியோரது வீட்டின் மேற்கூரை நொறுங்கி விழுந்தது. இதில் ராமலெட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தகவலறிந்த அதிமுக வேட்பாளா் ராஜலெட்சுமி, செவ்வாய்க்கிழமை அவரது வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினாா்.
அவருடன், அதிமுக நகரச் செயலா் ஆறுமுகம், ஒன்றியச் செயலா் ரமேஷ், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் முத்துக்குட்டி, கோவிந்தன், கோட்டிலிங்கம் ஆகியோா் சென்றனா்.