ஆலங்குளம் தொகுதியில் தி‘முக போட்டி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்தவா், அமமுகவில் இணைந்தாா்.
சிவலாா்குளத்தைச் சோ்ந்தவா் பூல்பாண்டியன்(56). முன்னாள் திமுக ஒன்றியச் செயலா். இவா், பூங்கோதை ஆலடி அருணாவுக்கு எதிராக போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்தாா். பரிசீலனையில் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் திமுகவிலிருந்து விலகி அமமுக மாவட்டச் செயலா் வி. முருகையா பாண்டியன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தாா். அப்போது, ஒன்றிய அதிமுக செயலா் கே. முருகையா பாண்டியன், நகரச் செயலா் சுப்பையா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.