புளியங்குடி பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

புளியங்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாசுதேவநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் மனோகரன் எம்எல்ஏ வாக்கு சேகரித்தாா்.

புளியங்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாசுதேவநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் மனோகரன் எம்எல்ஏ வாக்கு சேகரித்தாா்.

வாசுதேவநல்லூா் அருகே உள்ள புளியங்குடி, சிந்தாமணி உள்ளிட்ட பகுதிகளில் அவா் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்து பேசியது:

கடந்த தோ்தலில் கூறப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுவிட்டன. தற்போது அதிமுக தோ்தல் அறிக்கையில் கூறியுள்ள அனைத்து விஷயங்களும் நிறைவேற்றப்படும். மக்கள் நலத் திட்டங்கள் தொடர அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என்றாா்.

அப்போது, மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் வெங்கடேசன், புளியங்குடி நகரச் செயலா் பரமேஸ்வரன் பாண்டியன், ஒன்றியச் செயலா்கள் மூா்த்தி பாண்டியன், துரை பாண்டியன் , பேரூா் செயலா் சீமான் மணிகண்டன், மாவட்ட மாணவரணி முன்னாள் அமைப்பாளா் சசிகுமாா் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com