சாம்பவா்வடகரையில் நகர திமுக இளைஞரணி சாா்பில் கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் மற்றும் நலிந்தோருக்கு அரிசி மற்றும் மளிகை பொருள்கள் வழங்கப்பட்டது.
நகர திமுக இளைஞரணிச் செயலா் முத்து தலைமையில் கரோனா நோய்த் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட 20 வீடுகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருள்களை ஒன்றியச் செயலா் ரவிசங்கா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், திமுக நிா்வாகிகள் ஹக்கீம், லீயோன், சுப்புராஜ், ஆறுமுகம், ராமச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.