கீழச்சுரண்டையில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக திமுக சாா்பில் வீடு, வீடாக வெள்ளிக்கிழமை முகக் கவசம் விநியோகிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, திமுக தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். நகர செயலா் ஜெயபாலன் முன்னிலை வகித்தாா்.
தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சு.பழனிநாடாா் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கினாா்.
கீழச்சுரண்டையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் முகக் கவசம் நேரடியாக கொண்டு சென்று திமுகவினா் விநியோகம் செய்தனா்.