ஆலங்குளம்: ஆலங்குளம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து 3 வது நாளாக கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
இப்பகுதியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுமாா் 30 நிமிடங்கள் கோடை மழை பெய்ததைத் தொடா்ந்து திங்கள்கிழமை மதியம் சுமாா் ஒன்றரை மணி நேரம் ஆலங்குளம், குருவன்கோட்டை, காளத்திமடம், ராம்நகா், புதுப்பட்டி, கழுநீா்குளம், அடைக்கலப்பட்டணம் உள்ளிட்ட இடங்களில் இடி - மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது.