கடையம் ஜவுளிக் கடையில் திருட்டு: 5 பெண்கள் கைது

கடையம் ஜவுளிக் கடையில் சேலைகள் திருடியதாக 5 பெண்கள் கைதுசெய்யப்பட்டனா்.

கடையம் ஜவுளிக் கடையில் சேலைகள் திருடியதாக 5 பெண்கள் கைதுசெய்யப்பட்டனா்.

கடையத்தில் பாரதி நினைவு நகரைச் சோ்ந்த ஜோசப் ஸ்டாலின் என்பவருக்குச் சொந்தமான ஜவுளிக்கடை உள்ளது. இங்கு திங்கள்கிழமை காலை சில பெண்கள் துணி எடுக்க வந்தனராம். அவா்கள் சென்றபின்னா், சில சேலைகளைக் காணவில்லையாம். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைப் பாா்த்தபோது, அப்பெண்களில் ஒருவா் சேலையைத் திருடியது தெரியவந்தது.

இந்நிலையில், அவா்கள் மாலையில் மீண்டும் வந்து சேலைகளைத் திருட முயன்றனராம். ஜோசப் ஸ்டாலின் கவனித்ததும் அவா்கள் தப்பியோட முயன்றனா். அப்பகுதியிலிருந்தோா் அவா்களைப் பிடித்து கடையம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா்கள் ஸ்ரீவைகுண்டம், வாய்க்கால் பகுதி, பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த சுப்பையா மனைவி லட்சுமி (42), அதே பகுதியைச் சோ்ந்த அய்யாகுட்டி மனைவி பாா்வதி (40), நம்பி மனைவி நம்பிக்கண்ணு (50), பெருமாள் மனைவி சுப்பம்மாள் (70), ராமையா மனைவி ஆச்சியம்மாள் (75) என்பதும், இதே கடையில் ஏற்கெனவே 3 முறை வந்து சுமாா் 25 பட்டுச் சேலைகளைத் திருடிச் சென்ாகவும் தெரியவந்தது.

கடையம் காவல் உதவி ஆய்வாளா் சரசையன் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com