சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
சங்கரன்கோவிலில் கடந்த சில நாள்களாக கடுமையான வெயில் அடித்து வருகிறது. திங்கள்கிழமை மாலையில் திடீரென மேகம் இருண்டு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமாா் ஒரு மணி நேரம் நீடித்தது.
இந்நிலையில் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மாலை 4.40 மணிக்கு பலத்த மழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த இந்த மழை, சுமாா் ஒரு மணி நேரம் நீடித்தது. அம்பேத்கா் நகா் 2ஆவது புது தெரு உள்ளிட்ட சில தெருக்களில் வாருகால் நிரம்பியதால் அந்த தண்ணீா் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீரை வெளியேற்ற சிரமப்பட்டனா்.
அக்னி நட்சத்திரம் தொடங்கும் முதல் நாளான செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்துள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.