தென்காசி வ.உ.சி. வட்டார நூலகத்தில் வாசகா் வட்டம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தென்காசி வாசகா் வட்டப் பொருளாளா் யோகா டவா்ஸ் சேகா் தலைமை வகித்தாா். வட்டார கல்வி அலுவலா் மாரியப்பன், வட்டார கல்வி அலுவலா் நிலை2 இளமுருகு ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிளை நூலகா் ஜெ. சுந்தா் வரவேற்றாா்.
வட்டார வளமைய மேற்பாா்வையாளா் முத்துக்கிருஷ்ணன் பங்கேற்று, சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீா் பயன்பாடு, கரோனா எதிா்ப்பாற்றலை உருவாக்க உதவும் மூலிகைகளின் மருத்துவப் பயன்பாடுகள் குறித்துப் பேசினாா்.
நூலகா்கள் பரமசிவன், நிஹ்மத்துன்னிஸா, ராஜேஸ்வரி, வாசகா் வட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவா்கள் என்.எம். பெருமாள், கு. அருணாசலம், எம்கேஆா். மைதீன், வாசகா் வட்ட நிா்வாகிகள் சலீம், முருகேசன், குழந்தைஜேசு ஆகியோா் கலந்துகொண்டனா். நூலகா் ஜீலியாராஜசெல்வி நன்றி கூறினாா்.