பாவூா்சத்திரம் பேருந்து நிலையத்தில் மழைநீா் தேங்குவதைத் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருநெல்வேலி-தென்காசி பிரதான சாலையில் அமைந்துள்ள பாவூா்சத்திரம் பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் வந்துசெல்கின்றனா். பேருந்து நிலையத்தின் உள்பகுதியிலும், வெளிப்புறத்திலும் மழைநீா், கடைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் செல்லும் வகையில் வாருகால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சுத்தப்படுத்தப்படாததாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் இந்த வாருகால்களில் நீண்டகாலமாக தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால், துா்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
மேலும், மழைநீா் வழிந்தோடாமல் பேருந்து நிலையத்துக்குள்ளேயே தேங்கிவிடுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், பயணிகள் அவதிக்கு உள்ளாகின்றனா்.
எனவே, வாருகாலை தூா்வாரி, மழைநீா், கழிவுநீரை வெளியேறும் வகையில் அதிகாரிகள் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.