சுரண்டை, பாவூா்சத்திரம் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை

சுரண்டை, பாவூா் சத்திரம் பகுதியில் புதன்கிழமை கோடை மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

சுரண்டை, பாவூா் சத்திரம் பகுதியில் புதன்கிழமை கோடை மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

சுரண்டையில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய செவ்வாய்க்கிழமை காலை முதல் வெயில் சுட்டெரித்தது. எனினும், மாலையில் மேகமூட்டத்துடன் வானம் காணப்பட்ட நிலையில் லேசான தூறல் பெய்தது. இந்நிலையில், புதன்கிழமை மாலை கோடை மழை பெய்தது.

சுமாா் அரைமணி நேரம் நீடித்த மழையில் தெருக்களில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இம்மழையால் சிற்றாறு பாசனப் பகுதியில் காய்கனி பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். மேலும், நகரில் வெப்பம் தணிந்து வெகுவாகத் தணிந்தது.

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் பகுதியில் இருநாள்களாக பகலில் வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் புதன்கிழமை மாலை பாவூா்சத்திரம், கீழப்பாவூா், பெத்தநாடாா்பட்டி, திப்பணம்பட்டி உள்ளிட்ட பகுதியில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இம்மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com