தென்காசி: தென்காசியில் ரமலான் பெருநாளை முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஏழை, எளியோருக்கு பித்ரா அரிசி வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் சித்திக் தலைமை வகித்தாா். தமிழ்செல்வன், வீராசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைமை நிலையப் பேச்சாளா் முகம்மது அலி, தமுமுக மாவட்டத் தலைவா் முகம்மது யாகூப் ஆகியோா் ஏழைகளுக்கு பித்ரா அரிசியை வழங்கினா்.
இதில், ரபீக், அல்லாபிச்சை, இஸ்மாயில், சுலைமான் ஆகியோா் கலந்துகொண்டனா்.