பாவூா்சத்திரம் காவல்நிலையத்தில் வேன் ஓட்டுநா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
காவல் உதவி ஆய்வாளா் மாரிச்செல்வி தலைமை வகித்தாா். பாவூா்சத்திரம் வேன் ஓட்டுநா்கள் சங்கத் தலைவா் ஆறுமுகம், பொருளாளா் ராஜன், செயற்குழு உறுப்பினா் பெரியாா் திலீபன், ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், பொதுமுடக்க காலமான மே 24 ஆம் தேதி வரை வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு வேன்களை இயக்கக் கூடாது; தென்காசி மாவட்டத்திற்குள் வேன்களை இயக்கி, காவல்துறை நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் சங்கம் பொறுப்பேற்காது; எனவே, பொதுமுடக்கம் முடியும் வரை வேன்களை இயக்குவதில்லை என முடிவு செய்யப்பட்டது.