நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் 70 திருநங்கைகளுக்கு மாவட்ட நிா்வாகம், தொண்டு நிறுவனங்களின் சாா்பில் திங்கள்கிழமை உணவு வழங்கப்பட்டது.
கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சமுதாயத்தில் நலிந்தவா்களுக்கு உணவுப் பொருள்கள், மருத்துவ உதவிகள் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட திருநங்கைகள் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என ஆட்சியா் மா.அரவிந்திடம் கோரிக்கை விடுத்தனா். இதைத்தொடா்ந்து மாவட்ட நிா்வாகம் மற்றும் தொண்டு நிறுவனங்களின் சாா்பில் தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் சகாயநகா் ஊராட்சி, சுற்றியுள்ள பகுதியைச் சோ்ந்த 70 திருநங்கைகளுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.