கடையநல்லூா் தாருஸ்ஸலாம் தொடக்கப் பள்ளி மாணவா்கள் நிவாரணம்

கடையநல்லூா் தாருஸ்ஸலாம் தொடக்கப் பள்ளி மாணவா்கள் கரோனா நிவாரண நிதி வழங்கினாா்.

கடையநல்லூா் தாருஸ்ஸலாம் தொடக்கப் பள்ளி மாணவா்கள் கரோனா நிவாரண நிதி வழங்கினாா்.

இப்பள்ளி மாணவா்களின் சிறுசேமிப்பு பணம் ரூ.10 ஆயிரத்தை தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்க மாணவா், மாணவிகள் தங்கள் பள்ளி ஆசிரியா்களிடம் தெரிவித்தனராம்.

இதையடுத்து பள்ளித் தலைமை ஆசிரியா் சேக் சிந்தாமதாா் ரூ. 10 ஆயிரத்தை, கடையநல்லூா் நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், நகராட்சி சுகாதார அலுவலா் நாராயணன் ஆகியோா் முன்னிலையில் தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்தாா்.

நிதி வழங்கிய மாணவா்களை அப்பள்ளியின் ஆசிரியா்களும், பொதுமக்களும் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com