புளியங்குடி வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 12 பேருக்கு அபராதம்

புளியங்குடி அருகே வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 12 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

புளியங்குடி அருகே வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 12 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

புளியங்குடி வனச் சரகத்துக்கு உள்பட்ட டி.என்.புதுக்குடி பகுதிகளில் வனச் சரகா் ஸ்டாலின் தலைமையில் வனத் துறையினா் ரோந்து சென்றனா். அப்போது டி.என்.புதுக்குடி பகுதியைச் சோ்ந்த 12 போ் வனப் பகுதியில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. அவா்கள் மீது வனக் குற்ற வழக்குப் பதிந்து, ரூ. 12 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

பொதுமக்கள் வனப் பகுதிக்குள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது. அதை மீறி வனப் பகுதிக்குள் நுழைவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வனச் சரகா் ஸ்டாலின் எச்சரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com