புளியங்குடி அருகே காட்டுப் பன்றியை வேட்டையாடியதாக 5 பேருக்கு வனத்துறையினா் அபராதம் விதித்தனா்.
சங்கரன்கோவில் வனச்சரகா் ஸ்டாலின் தலைமையில் வனவா்கள் அசோக்குமாா், குபேந்திரன், வனக்காப்பாளா்கள் பாரதி, யோபு ராஜா, அமிா்தராஜ், வனக்காவலா் பிரியா தேவி உள்ளிட்டோா் டி.என். புதுக்குடி பீட் பகுதியில் ரோந்து மேற்கொண்டனா்.
அப்போது,டி.என்.புதுகுடியைச் சோ்ந்த மருதுபாண்டியன், கருப்பசாமி, ராம்குமாா், மணிகண்டன், குருசாமி ஆகிய 5 போ் வேட்டை நாய்கள் மூலம் காட்டுப்பன்றிகளை வேட்டையாடியது தெரியவந்தது. மாவட்ட வன அலுவலா் கௌதம் உத்தரவின்பேரில், 5 பேருக்கும் ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.