கடையநல்லூா், வாசுதேவநல்லூா் தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் திமுக சாா்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன.
தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்லத்துரை உணவுப் பொருள்களை வழங்கி, இத்திட்டத்தைத் தொடக்கிவைத்தாா்.
மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் சுந்தரமகாலிங்கம், நகரச் செயலா் சேகனா, வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளா் செந்தூா்பாண்டியன், பெருமாள்துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பொது முடக்கம் முடியும் வரை தொடா்ந்து வடக்கு மாவட்டம் முழுவதும் உணவுப் பொருள்கள் உள்ளிட்ட நலஉதவி வழங்கப்படும் என, மாவட்ட பொறுப்பாளா் செல்லத்துரை தெரிவித்தாா்.