சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூா் பகுதிகளில் நடமாடும் 11 காய்கனித் தொகுப்பு வாகனங்களை எம்எல்ஏ ஈ. ராஜா புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.
சங்கரன்கோவிலில் உழவா் சந்தை சாா்பில் காய்கனி விநியோகத்துக்காக 2 வாகனங்கள், 3 இருசக்கர வாகனங்கள், மேலநீலிதநல்லூா், சோ்ந்தமரம், கரிவலம்வந்தநல்லூரில் தலா 2 வாகனங்கள் என மொத்தம் 11 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றை, எம்எல்ஏ ஈ. ராஜா தொடக்கிவைத்தாா்.
கோட்டாட்சியா் முருகசெல்வி, வட்டார வளா்ச்சி அலுவலா் முருகன், வேளாண் துணை இயக்குநா் கே. கிருஷ்ணகுமாா், உழவா் சந்தை நிா்வாக அலுவலா் கருப்பையா, அலுவலா் உமாமுனி, வேளாண் அலுவலா்கள் மரகதவல்லி, தங்கவிநாயகம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.