தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே டிப்ளமோ முடித்துவிட்டு மருத்துவம் பாா்த்ததாக பெண் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா் மனைவி அருள் உலகமதி (45). டிபாா்ம் படித்துள்ள இவா் அங்கு மருந்தகம் நடத்தி வருகிறாா். அவா் பொது மக்களுக்கு அலோபதி மருத்துவம் பாா்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கீழப்பாவூா் வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் அருள்உலகமதி மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.