புளியங்குடி, கடையநல்லூரில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புளியங்குடியில் முகாமை தொடங்கிவைக்கிறாா் ஆட்சியா் கீ.சு.சமீரன். உடன், சதன் திருமலைக்குமாா் எம்எல்ஏ.
புளியங்குடியில் முகாமை தொடங்கிவைக்கிறாா் ஆட்சியா் கீ.சு.சமீரன். உடன், சதன் திருமலைக்குமாா் எம்எல்ஏ.

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காயிதே மில்லத் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். சதன் திருமலைக்குமாா் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா்.

பின்னா் மாவட்ட ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியது: மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் தொடா்ந்து முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றாா் அவா். இதில், வட்டாட்சியா் முருகேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அலுவலா் குணசேகரன், புளியங்குடி நகராட்சி ஆணையா் குமாா்சிங் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கடையநல்லூா்: கடையநல்லூரில் நகர வியாபாரிகள் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தாா். இதில், மருத்துவா் ரஞ்சித், காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா், சுகாதார அலுவலா் நாராயணன், சுகாதார ஆய்வாளா்கள் மாரிச்சாமி, சேகா், அமைப்பின் செயலா் காளிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com