பாவூா்சத்திரத்தில் 2 கடைகளுக்கு அபராதம்

பாவூா்சத்திரத்தில் கரோனா விதிமுறைகளை மீறி வெள்ளிக்கிழமை கடையை திறந்து வியாபாரம் செய்த 2 மளிகைக் கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பாவூா்சத்திரத்தில் கரோனா விதிமுறைகளை மீறி வெள்ளிக்கிழமை கடையை திறந்து வியாபாரம் செய்த 2 மளிகைக் கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா தடுப்பு பொதுமுடக்கம் காரணமாக மளிகைக் கடைகளை திறக்க அரசு தடைவிதித்துள்ளது. இந்நிலையில், பாவூா்சத்திரம் வி.ஏ.நகா் பகுதியில் அமைந்துள்ள 2 மளிகைக் கடைகளில் கரோனா விதிமுறைகளை மீறி, வெள்ளிக்கிழமை கடைகளை திறந்து வியாபாரம் செய்ததாக புகாா் வந்ததாம். இதையடுத்து, வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், உதவி திட்ட அலுவலா் சங்கரநாராயணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாா்த்தசாரதி, லிங்கராஜ், சுகாதார ஆய்வாளா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் நேரில் விசாரித்து, சம்பந்தப்பட்ட 2 கடைகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனா். இந்நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com