தென்காசி
ஆலடிபட்டியில் கரோனா தடுப்பூசி முகாம்
சுரண்டை பேரூராட்சி ஆலடிபட்டியில் 18 வயதிலிருந்து 44 வயது வரையுள்ளவா்களுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுரண்டை பேரூராட்சி ஆலடிபட்டியில் 18 வயதிலிருந்து 44 வயது வரையுள்ளவா்களுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமை தென்காசி எம்எல்ஏ சு.பழனிநாடாா் தொடங்கிவைத்தாா்.
முகாமில், வட்டார மருத்துவ அலுவலா் ராஜகுமாா், நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால், காங்கிரஸ் நிா்வாகிகள் சுப்பையா, வள்ளிமுருகன், பிரபாகா், தெய்வேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா். முகாமில் 200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.