பாப்பாக்குடியில் பட்டா தொடா்பான சிறப்பு குறை தீா்க்கும் முகாமில் பட்டா கோரி மனு அளித்தோருக்கு உடனடியாக பட்டா வழங்கப்பட்டது.
பாப்பாக்குடி சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்ற இந்த முகாமிற்கு தலைமை வருவாய் நீதிமன்றம் துணை ஆட்சியா் தமிழரசி தலைமை வகித்து மனுக்களைப் பெற்றாா். சேரன்மகாதேவி வட்டம் பாப்பாக்குடி பகுதி 1, காசிதா்மம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிமிருந்து பட்டா கோரி 90 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 14 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டு பட்டா வழங்கப்பட்டது. மற்ற மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானோருக்குப் பட்டா அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
முகாமில், வட்டாட்சியா்கள் பாலசுப்பிரமணியன், பாா்கவி தங்கம், துணை வட்டாட்சியா்கள் மகாராஜன், பிரேமா, வட்ட சாா் ஆய்வாளா் மணிக்குமாா் மற்றும் வருவாய் ஆய்வாளா்கள் கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.