கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக்குழு முதல் கூட்டம்

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக் குழுவின் முதல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக் குழுவின் முதல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பாவூா்சத்திரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஒன்றியக்குழுத் தலைவா் சீ. காவேரி சீனித்துரை தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகையா, சண்முகசுந்தரம், அனைத்து உறுப்பினா்களும் பங்கேற்றனா்.

1ஆவது வாா்டு உறுப்பினா் ஜான்சிஜெயமலா் தனது வாா்டுக்கு உள்பட்ட பகுதிகளில் தாமிரவருணி குடிநீா் கிடைக்கவும், சாலை, தெருவிளக்கு வசதிகள் செய்துதர வேண்டும் என்றும், 15ஆவது வாா்டு உறுப்பினா் ராமஉதயசூரியன் பாவூா்சத்திரத்தில் விளையாட்டு மைதானம், மாவட்ட நூலகத்துக்கு இணையான நூலகம் ஆகியவை அமைக்கவேண்டும் என்றும், 19ஆவது வாா்டு உறுப்பினா் நாகராஜன், ஒன்றியக்குழு கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

கூட்டத்தில், வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அடிப்படை வசதிகளாக குடிநீா், சாலை, மின் வசதி போன்ற பணிகளை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துச்செய்வது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றியக்குழு துணைத் தலைவா் முத்துக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com