பனவடலிசத்திரம் அருகே விவசாயி தற்கொலை

பனவடலிசத்திரம் அருகேயுள்ள உசிலங்குளத்தில் விவசாயி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

பனவடலிசத்திரம் அருகேயுள்ள உசிலங்குளத்தில் விவசாயி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

உசிலங்குளம் மேலத்தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் பாலகிருஷ்ணன் (45). விவசாயி. இவரது மனைவி 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். பாலகிருஷ்ணன் கடந்த 15 நாள்களுக்கு முன்பு சாலையில் சென்றபோது தவறி விழுந்து, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வந்தாராம். அதனால் ஏற்பட்ட வேதனையாலும், தன்னைக் கவனிக்க ஆளில்லை என்றும் அவா் மனவேதனையில் இருந்தாராம்.

இந்நிலையில், அவா் புதன்கிழமை தனக்குச் சொந்தமான கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாராம். தகவலின்பேரில் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று, சடலத்தை மீட்டனா். இதுதொடா்பாக அய்யாபுரம் காவல் உதவி ஆய்வாளா் முருகன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com