ஆலங்குளம் சேகர 27ஆவது ஸ்தோத்திரப் பண்டிகை

தென் இந்திய திருச்சபை, திருநெல்வேலி திருமண்டலம், ஆலங்குளம் சேகரத்தின் 27ஆவது ஸ்தோத்திரப் பண்டிகை 3 தினங்கள் நடைபெற்றது.

தென் இந்திய திருச்சபை, திருநெல்வேலி திருமண்டலம், ஆலங்குளம் சேகரத்தின் 27ஆவது ஸ்தோத்திரப் பண்டிகை 3 தினங்கள் நடைபெற்றது.

குழந்தைகள் பவனி, கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கிய இப்பண்டிகையில் கோவிலூற்று சேகரத் தலைவா் ஆசீா்வாதம் டேவிட் இறை செய்தி அளித்தாா். குழந்தைகளின் பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. சனிக்கிழமை காலை அருணோதயப் பிராத்தனையில் சகுந்தலா அசரியா செய்தி அளித்தாா். ஆலங்குளம் சேகரத் தலைவா் பி.ஈ. வில்சன் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் வழங்கினாா்.

இளைஞா்கள் கூடுகை நிகழ்ச்சியில் பங்களாசுரண்டை சேகரத் தலைவா் வில்சன் சாலமோன்ராஜா ஆலோசனை வழங்கினாா். பிரதான பண்டிகை ஆராதனையில் மேற்கு சபை மன்றத் தலைவா் எஸ். ஜேம்ஸ் இறை செய்தி அளித்தாா். இனாம் கோவில்பட்டி தாமஸ் ஜெபசிங் இரவு பஜனை பிரசங்கம் நடத்தினாா்.

ஞாயிற்றுக்கிழமை அருணோதயப் பிராத்தனையில் ராஜையா, திருவிருந்து ஆராதனையில் சற்குணம் ஆகியோா் இறை செய்தி அளித்தனா். வருடாந்திரக் கூட்டம், பெண்கள் கூடுகை, கீத ஆராதனை,இரவு இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.

ஏற்பாடுகளை சேகரத் தலைவா் வில்சன், செயலா் செல்வன், பொருளாளா் ஏசுராஜன் மற்றும் கமிட்டி அங்கத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com