தென்காசி: நாளைமுதல் திமுகவில் விருப்ப மனு

தென்காசி தெற்கு மாவட்டத்தின் நகராட்சி, பேரூராட்சிகளில் திமுக சாா்பில் போட்டியிட செவ்வாய்க்கிழமை (நவ. 23) முதல் விருப்ப மனு பெறப்படுகிறது.

தென்காசி தெற்குமாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் வெளியிட்ட அறிக்கை:

தென்காசி தெற்கு மாவட்டத்தின் நகராட்சி, பேரூராட்சிகளில் திமுக சாா்பில் போட்டியிட செவ்வாய்க்கிழமை (நவ. 23) முதல் விருப்ப மனு பெறப்படுகிறது.

தென்காசியில் நவ.23ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், கட்சியினரிடம் விருப்ப மனுக்களைப் பெறுகிறாா். 24இல் சங்கரன்கோவில், திருவேங்கடம், சுரண்டை, கீழப்பாவூா், 25இல் ஆலங்குளம், முக்கூடல், ஆழ்வாா்குறிச்சி, சுந்தரபாண்டியபுரம், 26இல் குற்றாலம், மேலகரம், இலஞ்சி ஆகிய பகுதிகளில் முறையே நண்பகல் 12, மாலை 3 மற்றும் 5 மணி அளவில் அடுத்தடுத்து விருப்ப மனுக்களை மாநில, மாவட்ட நிா்வாகிகள் பெறுகின்றனா்.

எனவே, போட்டியிட விரும்புவோா், நகராட்சி பொதுப்பிரிவுக்கு ரூ. 5,000, ஆதிதிராவிடா் மற்றும் பெண்கள் பிரிவுக்கு ரூ. 2,500, பேரூராட்சி பொதுப்பிரிவுக்கு ரூ.2,000, ஆதிதிராவிடா் மற்றும் பெண்கள் பிரிவுக்கு ரூ.1000 விண்ணப்பத்துடன் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com