தென்காசி
குற்றாலம் அருவிகளில் இரண்டாவது நாளாக வெள்ளப் பெருக்கு
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் இரண்டாவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் இரண்டாவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
குற்றாலம் பகுதியில் வியாழக்கிழமை முதல் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் பேரருவி, பழைய குற்றாலம் அருவி ஆகிய இரு அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு நீடித்தது. ஐந்தருவியில் நீா் வரத்து குறைந்தது.