சாம்பவா்வடகரை அகத்தீசுவரா் கோயிலில் சிவராத்திரி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி திங்கள்கிழமை இரவு 11 மணிக்கு அனுமன் நதி குகையில் உள்ள சாம்பவ மூா்த்தி, தென்கரையில் உள்ள அகத்தீசுவரா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சிவராத்திரி வழிபாடு நடைபெற்றது.
மகாளய அமாவாசை: புதன்கிழமை (அக்.6) மகாளய அமாவைசையையொட்டி பகல் 12 மணிக்கு அகத்தீசுவரா் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.