மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் 117 வாக்குச் சாவடிகள்

சங்கரன்கோவில் மேலநீலிதநல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் அமைக்கப்பட்டுள்ள 117 வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.
snk5box_0510chn_43_6
snk5box_0510chn_43_6

சங்கரன்கோவில் மேலநீலிதநல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் அமைக்கப்பட்டுள்ள 117 வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டப் பேரவைத் தொகுதியில் சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலிதநல்லூா் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் மேலநீலிதநல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் முதல் கட்ட தோ்தல் புதன்கிழமை நடைபெறுகிறது.

மேலநீலிதநல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் 1 மாவட்ட ஊராட்சி உறுப்பினா், 12 ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள், 20 ஊராட்சித்தலைவா்கள், 168 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் ஆகிய பதவிகளுக்கு வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இதற்காக 117 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குச் சாவடிக்கு வாக்குப் பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேன், மற்றும் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன. அந்தந்த வாக்குச் சாவடிகளில் தோ்தல் பணியாளா்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com