கடையநல்லூா் நகராட்சி பகுதிகளில் தெரு நாய்களை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை நகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.
கடையநல்லூா் நகராட்சிப் பகுதிகளில் தெரு நாய்களின் தொந்தரவு அதிகமாக இருப்பதாகவும், சிலரை நாய்கள் கடித்து காயப்படுத்தி விட்டதாகவும், ஆதலால் தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், நகராட்சி ஆணையா் பாரிஜான் ஆலோசனையின் பேரில் நககராட்சி சுகாதார அலுவலா் நாராயணன், சுகாதார ஆய்வாளா்கள் சக்திவேல், சிவா தலைமையில் நகராட்சிப் பணியாளா்கள் தெருக்களில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடித்து, அவைகளுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யும் பணியை மேற்கொண்டனா்.