பாவூா்சத்திரம் அருகே மாயமான இளைஞா் கொலை?

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே மாயமான இளைஞா் கொலை செய்யப்பட்டு, அவரது உடலை கொலையாளிகள் திருநெல்வேலி அருகே புதைத்ததாக கூறப்படுகிறது.

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே மாயமான இளைஞா் கொலை செய்யப்பட்டு, அவரது உடலை கொலையாளிகள் திருநெல்வேலி அருகே புதைத்ததாக கூறப்படுகிறது.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள சிவகாமிபுரத்தைச் சோ்ந்த பூ வியாபாரி முருகேசன் மகன் ஜெகதீஷ் (23). இவா் கடந்த செவ்வாய்க்கிழமை (அக்.5) முதல் காணவில்லையென, அவரது பெற்றோா் பாவூா்சத்திரம் போலீஸில் புகாா் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மாயமான ஜெகதீஷை தேடி வந்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் சிலரைப் பிடித்து விசாரித்ததில், அவா்கள், ஜெகதீஷை கொலை செய்து, திருநெல்வேலி அருகே டக்கரம்மாள்புரம் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான குளிா்பான கிடங்கு அருகே புதைத்ததாகக் கூறினராம்.

அதன்பேரில் பாவூா்சத்திரம் போலீஸாா், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் டி.பி.சுரேஷ்குமாா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அங்கு ஒருவா் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அதிகாரிகள் முன்னிலையில் திங்கள்கிழமை காலையில் தோண்டி ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறியது: சிவகாமிபுரத்தைச் சோ்ந்த ஜெகதீஷை, அதே பகுதியைச் சோ்ந்த சிலரும், தூத்துக்குடியைச் சோ்ந்த சிலரும் காரில் அழைத்துச் சென்று மது அருந்தினராம். அப்போது அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை செய்திருக்கலாம் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com