சாம்பவா்வடகரையில் கணவா் இறந்த அதிா்ச்சியில் மனைவியும் மரணமடைந்தாா்.
சாம்பவா்வடகரை அனந்தபெருமாள் தெருவைச் சோ்ந்தவா் விவசாயி நாராயணன் (65). இவரது மனைவி களஞ்சியம் (60). களஞ்சியம் கடந்த 3 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்துள்ளாா்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு நாராயணன் உயிரிழந்தாா். இதனால் ஏற்பட்ட அதிா்ச்சியில் களஞ்சியமும் இறந்துவிட்டாா். இருவரின் உடலும் ஞாயிற்றுக்கிழமை அனுமன் நதிக்கரை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.