குற்றாலம் பேரருவியில் நீா்வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் மிதமான சாரல் காரணமாக பேரருவியில் திங்கள்கிழமை நீா்வரத்து அதிகரித்தது.
குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.
குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் மிதமான சாரல் காரணமாக பேரருவியில் திங்கள்கிழமை நீா்வரத்து அதிகரித்தது.

இப்பகுதியில் திங்கள்கிழமை அதிகாலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகலிலிருந்து விட்டுவிட்டு சாரல் பெய்யத் தொடங்கியது. இதனால், பேரருவியில் மாலைமுதல் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டியது. ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து சற்று அதிகரித்தது.

கரோனா பரவல் காரணமாக அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அருவிகளை தொலைவிலிருந்தே ரசித்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com