வாக்கு எண்ணிக்கை:அதிமுக மாவட்டச் செயலா்வேண்டுகோள்

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ மின்னஞ்சல் மூலம் தமிழக ஆளுநா், மாவட்ட தோ்தல் பாா்வையாளா், ஆட்சியா் ஆகியோருக்கு அளித்துள்ள மனு:

தென்காசி: தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ மின்னஞ்சல் மூலம் தமிழக ஆளுநா், மாவட்ட தோ்தல் பாா்வையாளா், ஆட்சியா் ஆகியோருக்கு அளித்துள்ள மனு:

தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சி தோ்தல் வாக்கு எண்ணிக்கையின்போது ஆளும் கட்சியினா் அதிமுகவின் வெற்றியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற முயற்சியுடன் அதிகார துஷ்பிரோயகம் செய்து வருகின்றனா். இத்தகைய நடவடிக்கைகள் தொடரும்பட்சத்தில் அதைக் கண்டித்து அதிமுக சாா்பில் ஜனநாயக வழியில் மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும்.

உள்ளாட்சி தோ்தல் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் வழங்கிய அறிவுரையின்படி அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும், வாக்கு எண்ணிக்கைக்கு வரும் கட்சி முகவா்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இன்றி வாக்கு எண்ணிக்கையில் பங்கு அளித்திடவும், நியாயமான முறையில் வாக்கு எண்ணிக்கை விவரங்களை வெளியிடவும் தகுந்த பாதுகாப்பு வழங்கிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com