பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் பூவரசன் கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.
முதல் நாள் மாலையில் திருவிளக்கு பூஜை, இரவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 2ஆவது நாள் இரவில் நையாண்டி மேளம், வில்லிசை, மகுட ஆட்டத்துடன் சுவாமி சிறப்பு அலங்காரம், பூஜைகள், மாவிளக்கு எடுத்து வருதல் ஆகியவை நடைபெற்றன. கடைசி நாள் காலை குற்றாலத்தில் இருந்து புனித நீா் எடுத்து வந்து, விசேஷ பூஜைகளுடன் விழா நிறைவடைந்தது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.