குருவிகுளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பதவியை மதிமுகவும், துணைத் தலைவா் பதவியை காங்கிரஸும் கைப்பற்றின.
குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் தோ்தல் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், மதிமுக சாா்பில் போட்டியிட்ட விஜயலெட்சுமி கனகராஜ் 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.
அவரை எதிா்த்து திமுக சாா்பில் போட்டியிட்ட முத்துமாரி 5 வாக்குகள் பெற்றாா். துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முருகேஸ்வரி போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா். இந்தத் தோ்தலில் அமமுக உறுப்பினா் பங்கேற்கவில்லை.