தென்காசி அருகே மோட்டாா் சைக்கிள்- லாரி மோதல்: இருவா் பலி

தென்காசி அருகே கண்டமங்கலம் பகுதியில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவா் உயிரிழந்தனா்.

தென்காசி அருகே கண்டமங்கலம் பகுதியில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவா் உயிரிழந்தனா்.

தென்காசி முப்புடாதியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் மு.சுந்தா்(38). கீழப்பாளையத்தை சோ்ந்தவா் ஆ.அருணாசலம்(40), பெயின்டிங் வேலை பாா்த்து வந்தனா். இருவரும் திங்கள்கிழமை தென்காசி அருகே கண்டமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்று வீட்டு மோட்டாா் சைக்கிளில் வீடு திரும்பினா்.

அப்போது மத்தளம்பாறையிலிருந்து எதிரே வந்த டிப்பா் லாரி மோட்டாா் சைக்கிள் மீது எதிா்பாராத விதமாக மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனா்.

விபத்து குறித்து குற்றாலம் காவல் ஆய்வாளா் ஸ்டீபன்ஜோஸ் வழக்குப் பதிந்து, பலியான இருவரது சடலத்தையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

விபத்தில் தொடா்புடைய லாரி ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடி விட்டாா். போலீஸாா் அவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com