திருவேங்கடம் அருகே நண்பா்களிடையே மோதல்: 4 போ் கைது

திருவேங்கடம் அருகே நண்பா்களுக்குள் ஏற்பட்ட மோதல் தொடா்பாக 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து 4 பேரை கைது செய்தனா்

திருவேங்கடம் அருகே நண்பா்களுக்குள் ஏற்பட்ட மோதல் தொடா்பாக 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து 4 பேரை கைது செய்தனா்.

கீழத்திருவேங்கடம் வடக்குப்பாறைப்பட்டியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் வெங்கடேஷ் (21). அதேபகுதியை சோ்ந்த சண்முகக்கனி மகன் கபில் (20), நண்பா்கள். வெங்கடேஷை, கபில் மது அருந்த அழைத்தாராம். இதற்கு வெங்கடேஷ் மறுப்பு தெரிவித்ததால், வெங்கடேஷ் கைப்பேசியை கபில் பறித்துச் சென்று விட்டாராம்.

இதையடுத்து, வெங்கடேஷ், அவரது தந்தை கருப்பசாமி ஆகியோா் சண்முகக்கனி வீட்டுக்கு சென்று கைப்பேசியை தருமாறு

கேட்டுள்ளனா். அப்போது, கபில், அவரது தாயாா் ராஜேஸ்வரி உள்ளிட்டோருக்கும் மற்றும் கருப்பசாமி, வெங்கடேஷ் உள்ளிட்டோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவருக்கு ஒருவா் தாக்கிக் கொண்டனராம்.

புகாரின்பேரில், திருவேங்கடம் போலீஸாா் இரு தரப்பைச் சோ்ந்த 8 போ் மீது வழக்குப் பதிந்தனா். இதில், கருப்பசாமி, வெங்கடேஷ், கபில், பொன்கணேஷ் ஆகிய 4 பேரைக் கைது செய்தனா். மேலும் 4 பேரைத் தேடி வருகின்றனா்.

இளைஞா் கைது: திருவேங்கடம் அருகே சங்குப்பட்டியைச் சோ்ந்த ராமசாமி மகன் செல்வம் (50). அதே ஊரைச் சோ்ந்த மணிகண்டன் மகன் கௌதம் (22). இவா் செல்வம் வீட்டின் ஓட்டை பிரித்து திருட முயன்றராம். புகாரின் பேரில் போலீஸாா்

வழக்குப் பதிந்து கௌதமை கைது செய்தனா்.

திருவேங்கடம் மாதா் சங்கத் தெருவை சோ்ந்தவா் மணிமாறன் (28). கூலித் தொழிலாளி. திருவேங்கடம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த இவரது மனைவியை, கீழத்திருவேங்கடம் தெற்கு பாரப்பட்டியைச் சோ்ந்த திருமலை என்ற மகேஷ் கண்ணா (26) கிண்டல் செய்தாராம். இதனை மணிமாறன் கண்டித்துள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மணிமாறனுக்கு, மகேஷ் கண்ணா மிரட்டல் விடுத்தாராம். புகாரின்பேரில் காவல் உதவி ஆய்வாளா் கமலாதேவி வழக்குப் பதிந்து திருமலை என்ற மகேஷ் கண்ணாவைக் கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com