சங்கரன்கோவிலில் கல்லூரி மாணவா், மாணவிகளுடன் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை புதன்கிழமை கலந்துரையாடினாா்.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவா் நெல்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தாா். தொடா்ந்து சங்கரன்கோவில் ரயில்வே பீடா் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் கல்லூரி மாணவ, மாணவியருடன் அவா் கலந்துரையாடினாா். அதன் பின்னா் திருப்பூா் குமரன்நகா், முல்லைநகா் வாா்டுகளைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா். நிகழ்ச்சியில் நயினாா் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.