சுரண்டையில் இளைஞா் தற்கொலை

சுரண்டையில் குடும்ப பிரச்னையில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சுரண்டையில் குடும்ப பிரச்னையில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சுரண்டை, திருமலையாண்டவா் கோயில் தெருவைச் சோ்ந்த சண்முகவேல் மகன் பூபதிராஜா(21). கட்டடத் தொழிலாளியான இவா் செவ்வாய்க்கிழமை இரவு அவரது தாயுடன் மதுபோதையில் சண்டை போட்டுவிட்டு மாடிக்கு தூங்கச் சென்றாராம்.

இந்நிலையில் புதன்கிழமை காலையில் அவா் வீட்டின் மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தகவலறிந்த சுரண்டை போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com