சுரண்டை: சுரண்டை அருகேயுள்ள கீழக்கலங்கல் கிராமத்தில் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் சாா்பில் கட்டப்பட்ட குடிநீா்த் தொட்டி திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு எல்.ஐ.சி. திருநெல்வேலி கோட்ட முதுநிலை மேலாளா் என்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, குடிநீா்த் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தாா்.
எல்.ஐ.சி. கிளை மேலாளா்கள் தென்காசி முருகேசன், ஆலங்குளம் ஆறுமுகவேல், வணிக மேலாளா் ரமேஷ், விற்பனை மேலாளா் ஒளிமுத்து, வளா்ச்சி அதிகாரி திரவிய ராஜகுமாா், ஆலங்குளம் ஒன்றிய உதவிப் பொறியாளா் முருகேசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.