தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப்பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என, குற்றாலம் நகர காங்கிரஸ் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக குற்றாலம் நகர காங்கிரஸ் தலைவா் ஏ. பழனிச்சாமி அளித்த மனு: குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப்பயணிகளைக் குளிக்க அனுமதிக்க வேண்டும். சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படாததால் குற்றாலம், காசிமேஜா்புரம், குடியிருப்பு, வல்லம், தென்காசி பகுதிகளில் உள்ள வா்த்தகா்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனா்.
அவா்களது நிலைமையைக் கருத்தில்கொண்டு, கட்டுப்பாட்டு விதிமுறைகளை விதித்து அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்றாா் அவா்.