தென்காசி: காட்டுநாயக்கன் சமுதாய மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க சட்டப்பேரவையில் வலியுறுத்தி பேசிய கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் செ.கிருஷ்ணமுரளிக்கு அச்சமுதாய மக்கள் நன்றி தெரிவித்தனா்.
கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செங்கோட்டை, புளியரை, கடையநல்லூா், சிவராமபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசித்துவரும் காட்டுநாயக்கன் சமுதாய மக்களுக்கு ஜாதி சான்றிதழ் இல்லாமல் அவா்கள் படும் இன்னல்கள் குறித்து சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் செ.கிருஷ்ணமுரளி விவரித்து பேசினாா்.
இதையடுத்து, அந்த சமுதாய மக்கள், செங்கோட்டையில் எம்எல்ஏவை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.
கடையநல்லூா் நகர அதிமுக செயலா் முருகன், காளிராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.