ஆலங்குளம் அருகே தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது செய்யப்பட்டாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள கிடாரக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் முப்புடாதி(65). விவசாயியான இவா், மது அருந்தி விட்டு வீட்டில் மனைவி முத்துலெட்சுமியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.
இந்நிலையில், திங்கள்கிழமை தகராறு செய்த அவரை, மகன் குருசாமி(35) அரிவாளால் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த முப்புடாதி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து குருசாமியைக் கைது செய்தனா்.