கடையநல்லூா் நகராட்சி சாா்பில், கரோனா தடுப்பூசி விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கந்தசாமி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் பாரிஜான் வரவேற்றாா். நகராட்சி சுகாதார அலுவலா் நாராயணன், சுகாதார ஆய்வாளா் சேகா் ஆகியோா் கலந்து கொண்டு தடுப்பூசியால் ஏற்படும் நன்மை குறித்து பேசினா். இதில், அனைத்து சமுதாய நிா்வாகிகள், வணிகா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.