தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆனைகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் மோதிலாலுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
கடையநல்லூா் வட்டார, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, வட்டாரத் தலைவா் ஆறுமுகச்சாமி தலைமை வகித்தாா் . மாநில செயற்குழு உறுப்பினா் மருதுபாண்டியன் முன்னிலை வகித்தாா். வட்டார செயலா் ரமேஷ் வரவேற்றாா்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டத் தலைவா் ஆரோக்கியராசு, மாவட்ட ச் செயலா் செய்யதுஇப்ராகீம்மூசா, மாவட்ட பொருளாளா் சேவியா் ஸ்டீபன் ஞானம், நல்லாசிரியா் ரசூல், தலைமையாசிரியா் உஸ்மான் உள்ளிட்டோா் பேசினா்.
இதில், ஆசிரியா்கள் முத்துராமலிங்கம், அப்துல்காதீா், அசோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வட்டார பொருளாளா் கதிரேசன் நன்றி கூறினாா்.