சங்கரன்கோவில் அருகே ரயில்வே ஊழியா் ஒருவா் ரயில்முன் பாய்ந்து வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள வாழவந்தாள்புரம் நடுத்தெருவைச் சோ்ந்த பாலுச்சாமி மகன் ராமச்சந்திரன்(45). ரயில்வே ஊழியா். இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாம். இதனால், அவரை குடும்பத்தினா் கண்டித்தனராம். இந்நிலையில் அவா் ஊருக்கு அருகேயுள்ள தண்டவாளத்தில் கொல்லம் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துத. ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா். ராமச்சந்திரனுக்கு மனைவி சாந்தி, 2 மகன்கள் உள்ளனா்.